தமிழகத்தில் மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசின் கீழ் இயங்கும் மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் முறையாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காலி பணியிடங்கள்:
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி இருக்கிறார். இந்நிலையில் மருத்துவத்துறை இயக்குனர் பணியிடங்களை முறையாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
ஆதார்-பான் இணைப்பின் நிலையை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டுமா? Simple Steps இதோ!
மேலும் அவர் கூறுகையில், ஒரு நாட்டின் மனித வளர்ச்சியின் அளவினை நிர்ணயிப்பதிலும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகத் திகழ்வதிலும், முக்கியப் பங்கு வகிப்பது மக்கள் நல்வாழ்வுத் துறை தான் என தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பினை அளித்திடும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்தல், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.