இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு? ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!
கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் அச்சம் காரணமாக டிசம்பர் 15ம் தேதி இந்தியாவில் இருந்து தொடங்க இருந்த சர்வதேச போக்குவரத்து தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்கான தடை நீடிக்கிறது.
விமான சேவை:
கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் படி வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகளால் தான் தொற்று அதிகம் பரவுகிறது என்று கண்டறியப்பட்டது. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடியதால் பல்வேறு நாடுகள் இந்தியா உடனான விமான போக்குவரத்தினை தற்காலிகமாக ரத்து செய்தது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த நிலையில் அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. மேலும் உள்நாட்டு விமான போக்குவரத்தையும் தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து சர்வதேச விமான போக்குவரத்தும் மெல்ல மெல்ல தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது.
தமிழகத்தில் தீப்பெட்டியின் விலை இன்று முதல் ரூ.2 ஆக உயர்வு – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!
இந்த ஓமைக்ரான் வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் பாதிப்புகள் தென்பட்டு வருகிறது. அதனால் டிசம்பர் 15ம் தேதி இந்தியாவில் இருந்து தொடங்க இருந்த சர்வதேச விமான சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.