ஜன.7 முதல் சாதி வாரி கணக்கெடுப்பின் முதற்கட்டம் தொடக்கம் – பீஹார் முதல்வர் உறுதி!!
இந்தியாவில் பல்வேறு சாதிகளை கொண்ட மக்கள் பிரிவினை எதுவும் இன்றி ஒற்றுமையை கடைபிடிக்க உதவும் வகையில் தான் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், பீஹார் மாநிலத்தில் நாளை முதல் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதி வாரி கணக்கெடுப்பு:
பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை சாதி வாரியாக கணக்கெடுப்புகள் எடுக்கப்படவில்லை. ஆனால் பீஹார் மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்புகள் எடுக்கப்பட உள்ளதாக 2022 ஜூன் 1ம் தேதி முதல்வர் நிதிஷ் குமார், அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையிலும் நிதிஷ்குமார் இந்த முடிவில் உறுதியாக உள்ளார்.
நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – திடீரென குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், ஜனவரி 7ம் தேதி ஆகிய நாளை முதல், முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி, ஜனவரி 21ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 2ம் கட்ட கணக்கெடுப்பு பணிகள் மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பீஹார் அரசு மொத்தம் ரூ.500 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ஒபிசி பிரிவினரை துள்ளிதமாக கணக்கெடுத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீடுகளை சரியாக வழங்குவதற்காக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.