தமிழகத்தில் 30 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்புதல் – முதல்வரிடம் கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த நிலையில், பட்டியல் இன மக்களுக்கான அரசு பணியிடங்கள் நிரப்பபடவில்லை என்று எஸ்.சி, எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்கம் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்து உள்ள நிலையில், விரைவில் பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
முதல்வரிடம் கோரிக்கை:
தமிழகத்தில் கடந்த 2011 முதல் 10 ஆண்டுகளாக அதிமுக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்து வந்தது. தற்போது 2021ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்று திமுக தலைமையிலான அரசு புதிய ஆட்சியமைத்தது. தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட 30,000 அரசு பணியிடங்கள் நிரப்பபடவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூலை 12 மின்தடை!
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்கம் மாநில பொதுச் செயலாளர் டி.மகிமை தாஸ் அவர்கள் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசித்து உள்ளார். அதிமுக ஆட்சியில் நிரப்பப்படாமல் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு காலிப்பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்ப வேண்டும்.
TN Job “FB Group” Join Now
எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப் படிப்புக்கான ஊக்க தொகை போன்றவற்றை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். வீடற்ற ஆதிதிராவிடர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் பலன்களை வழங்கிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.