தமிழகத்தில் காத்திருக்கும் அரசு வேலை – ஆகஸ்ட் 16 விண்ணப்பிக்க இறுதி நாள்!
கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (Krishnagiri Fisheries Department) கீழுள்ள அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள மீன்வள உதவியாளர் (Fishery Assistant) பணிக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 16.08.2022 அன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான அறிவிப்பில், Fishery Assistant பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் (Krishnagiri Fisheries Department) காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Fishery Assistant பணிக்கு வீச்சுவலை வீசுதல், பழுதுப்பட்ட வலை சரி செய்தல், புதிய வலை பின்னுதல் மற்றும் நீச்சல் திறன் போன்ற பணிக்கு தொடர்புடைய திறன்களை பெற்ற நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,900/- முதல் ரூ.58,500/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
- இந்த அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
FFWD விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் krishnagiri.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர், சென்னை – 35 என்ற அலுவலக முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் (16.08.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.