பிறப்பு சான்றிதழில் தாயின் பெயரை சேர்ப்பது குறித்து மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் பிறப்பு சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களில் தாயின் பெயரை சேர்ப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் மேலும் 1969-ன் கீழ், பிறப்பை பதிவு செய்யும் விண்ணப்பத்தில் தாயாரின் பெயரை பதிவு செய்வதற்கும், தாயாரின் ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என குழந்தைகள் நலத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
தாயின் பெயர் சேர்ப்பு :
இந்தியாவில் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் போன்றவற்றில் உரியவர் பெயர் மற்றும் அவர்களின் தந்தையின் பெயர் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இது ஆணாதிக்க முறை என்று பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து சான்றிதழ்களிலும் தாய் மற்றும் தந்தை இருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு தாய் என்பது மிக முக்கியமான உறவாகும் அப்படிப்பட்ட தாயின் பெயர் சான்றிதழ்களில் இடம் பெற வேண்டும்.
தந்தைக்கு நிகரான உரிமையை தாய்க்கும் வழங்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எம்.பி. ரவிக்குமார் மக்களவையில் சான்றிதழ்களில் தாயின் பெயரை சேர்ப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். தாயின் பெயரை சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என வினவினார். அதற்கு இந்தியாவில் பிறப்பு சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களில் தாயின் பெயரை சேர்ப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும்.
TN Job “FB Group” Join Now
மேலும் 1969-ன் கீழ், பிறப்பை பதிவு செய்யும் விண்ணப்பத்தில் தாயாரின் பெயரை பதிவு செய்வதற்கும், தாயாரின் ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என குழந்தைகள் நலத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். அரசாங்க நடவடிக்கைகளில் ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.