தமிழகத்தில் இனி பிப்.26 No Bag தினம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் இனி பிப்.26 No Bag தினம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் இனி பிப்.26 No Bag தினம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் இனி பிப்.26 No Bag தினம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

உலகில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் 3 ஆம் அலையின் துவக்கமாக கொரோனா புது உருவமான ஓமைக்ரான் தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி. கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது.

மத்திய அரசில் ரூ.40,000 மாத ஊதியத்தில் 1,925 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ஓமைக்ரான் பரவல் தமிழகத்திலும் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு ஜனவரி 3 ஆம் தேதி அறிவித்தது. இதனை தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்பு எடுக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு எடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று ஜனவரி 30 ஆம் தேதி அறிவித்தது.

விஜய் டிவி முன்னணி சீரியலில் களமிறங்கும் “பிக்பாஸ் ராஜு” – வைரலாகும் புகைப்படம்!

அதேபோல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்கள் வாயிலாக மாணவர்கள் அடைய தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி தேதி No Bag தினமாக கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!