பிப்ரவரி 20ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
பஞ்சாப் மாநிலத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு பிப்ரவரி 20ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை:
பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி அன்று தேர்தல் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 16ம் தேதி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மக்கள் அதனை சிறப்பிப்பார்கள்.
TCS, Wipro பிரஷ்ஷர்களுக்கு 7.3 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – ஜாக்பாட் அறிவிப்பு!
இதனால் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி 20ம் தேதி அன்று வாக்குப்பதிவு நிர்ணயிக்கப்பட்டது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு பிப்ரவரி 20ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு நேற்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 16 முதல் மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள் திறப்பு? அரசு நடவடிக்கை!
பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள எந்தவொரு வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் மற்றும் பஞ்சாப் விதான் சபா-2022-க்கான தேர்தலில் வாக்களிக்க உரிமையுள்ள அனைவருக்கும் வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் வகையில் தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.