“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிரின் முல்லையாக இனி புது நடிகை – ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இந்த வாரம் முழுவதும் கதிர் முல்லை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. முல்லை குழந்தை இல்லாமல் கஷ்டத்தில் இருக்க மருத்துவ பரிசோதனையில் முல்லைக்கு குழந்தை பிறக்காது என தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த உண்மையை கதிர் முல்லையிடம் இருந்து மறைத்து இருக்கிறார். ஆனால் கதிரின் நடவடிக்கை எல்லாம் முல்லைக்கு சந்தேகத்தை கிளப்பியது. அதனால் மீனாவின் உதவியுடன் முல்லை மருத்துவமனைக்கு போகிறார்.
TN Job “FB Group” Join Now
அங்கே டாக்டர் உண்மையை சொல்ல, மனம் உடைந்த முல்லை வீட்டிற்கு வராமல் இருக்கிறார். கதிர் எல்லா இடங்களிலும் தேடி அலைவது எல்லாம் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஒரு பேட்டியில் அவர் சினிமா வாய்ப்புகள் வந்தால் சீரியலில் இருந்து விலகுவேன் என சொல்லி இருந்தார். தற்போது கதிரின் முல்லையாக நடிகை தேஜஸ்வினி நடிக்க இருக்கிறார்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கதிர் முல்லை ஜோடியும் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். முதலில் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்தார். ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் காவ்யா தான் முல்லையாக நடித்து வருகிறார். தற்போது காவ்யாவும் மாற்றப்பட இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடித்து பிரபலமான நடிகை தேஜஸ்வினி தன்னுடைய நடிப்பு திறமையால் பலரது மனதை கவருவார் என்பதில் சந்தேகம் இல்லை.