கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் ரூ.15 ஆயிரம் அபராதம் – பிரபல நிறுவனம் அறிவிப்பு!
அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளாமல் இருந்தால் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி அபராதம்
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பேரலையாக உருவெடுத்திருப்பதை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா பரவுவதை தடுக்க தடுப்பூசி ஒன்றே முக்கிய தீர்வாக கூறப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சிறப்பு மருத்துவம் படித்த மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் – என்ன காரணம்?
இந்நிலையில் தடுப்பூசி செலுத்த தவறினால் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு தொகை அபராதம் பிடித்தம் செய்யப்படும் என அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவித்து வருகிறது.
தமிழகத்தில் வீடு தேடி வரும் கல்வி, இயன்முறை மருத்துவம் – அரசு அறிவிப்பு!
இருப்பினும் சிலர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் காட்டி வருகின்றனர். அதனால் ஒரு முக்கிய அறிவிப்பை டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களின் ஒவ்வொரு மாத ஊதியத்தில் இருந்தும் ரூ.15 ஆயிரம் வரை அபராதமாக விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் சிகிச்சை செலவுக்கு ரூ.37 லட்சம் வரை செலவழிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.