பெண் ஆன்மீகவாதி அன்னபூரணி அளித்த பேட்டி – தொகுப்பாளருக்கு குவியும் பாராட்டு!
தமிழகத்தில் தற்போது சமீப நாட்களாக பிரபலமாகி வரும் பெண் சாமியார் அன்னபூரணி அளித்துள்ள பேட்டி மற்றும் அவரை பற்றிய சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் அவரை பேட்டி எடுத்துள்ள ஆங்கர் மிகவும் பிரபலமாகி வருகிறார்.
பெண் சாமியார் அன்னபூரணி அரசு:
சமூக வலைத்தளங்களில் எப்போதும் சர்ச்சையான விஷயங்கள் தான் அதிக பிரபலமடைந்து வருகிறது. இணையத்தின் உதவியுடன் இந்த விஷயங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால் சர்ச்சை ஆசாமிகள் விரைவில் நட்சத்திரங்களாகி விடுகின்றனர். தற்போது தமிழகத்தில் மிகவும் வைரலாக உள்ளவர் பெண் சாமியார் அன்னபூரணி அரசு. இவர் அளித்துள்ள பேட்டியும், மக்களுக்கு ஆசி வழங்கும் வீடியோவும் அதிக சர்சையில் சிக்கி உள்ளது. இதனால் இவர் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வீடியோக்களும் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு – கால அட்டவணை வெளியீடு!
இந்நிலையில் தனியார் யூடுயூப் சேனல் ஒன்றில் அன்னபூரணி அரசு அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் ஒரு ஆங்கர் இவரிடம் கேள்விகளை கேட்டு வந்தார். அதில் தான் தான் சக்தியின் வடிவம் என்றும், தற்போது நடக்கும் விஷயங்களுக்காக தான் தன்னை கடவுள் படைத்துள்ளார் என்றும் கூறினார். தான் யாரிடம் இருந்தும் ஓடி ஒழியவில்லை என்றும், இங்கு தான் தொடர்ந்து இருப்பதாகவும் கூறி உள்ளார். ஆன்மீகம் என்பது சொன்னால் புரியாது. அதை உணர்பவர்களுக்கு தான் புரியும் என்றும் கூறினார்.
பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான ஆவணங்கள் – முழு விபரங்கள் இதோ!
தொடர்ந்து ஆங்கர் அன்னபூரணியின் தனிப்பட்ட வாழ்க்கையான பிறந்தது, வளர்ந்தது மற்றும் மற்ற விஷயங்களை கேட்டு வந்தார். இதனால் கோபமடைந்த அன்னபூரணி தன்னை சாதாரணமாக நினைத்து கொண்டு தான் இவர் இப்படி எல்லாம் கேள்விகளை கேட்பதாகவும், தனக்கும் அரசு என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும் கூறினார். தான் சொல்வதை புரிந்து கொள்ளும் சக்தி இவர்களுக்கு இல்லை என்றும் கூறிவந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த நேர்காணலை நடத்திய ஆங்கருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. எப்படி தான் மனிதர் சிரிக்காமல் கேள்விகளை கேட்கிறார் என்று பாராட்டி வருகின்றனர்.