தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன கட்டுப்பாடுகள் என்று இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.
1. உணவகங்கள், தாங்கும் விடுதிகள், சமையல் கூடம் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த வேண்டும்.
2. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3. இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேர் மிகாமல் அனுமதிக்கலாம்.
4. துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள், யோகா பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டவைகளில் ஒரே நேரத்தில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
6. திரையரங்குகளில் மொத்த இருக்கைகளில் 50% பேர் மட்டும் அனுமத்திக்கப்பட்டு இயங்க வேண்டும்.
7. அழகு நிலையங்கள் மற்றும் சலூன்களில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
8. உள் விளையாட்டு அரங்குகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளை 50% பார்வையாளர்களை கொண்டு நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
9. இவற்றை தொடர்ந்து ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமலபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பொது போக்குவரத்து இயங்காது. எனவே ஞாயிற்று கிழமைகளில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்கள் சொந்த அல்லது வாடகை கார்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயண சீட்டு கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்களும் அந்த நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.