ESIC நிறுவனத்தில் ரூ.1,52,241/- சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!
பணியாளர் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Associate Professor, Assistant Professor பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் இன்றே விண்ணப்பிக்கவும்.
ESIC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பணியாளர் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள Associate Professor பணிக்கு என 02 பணியிடம், Assistant Professor பணிக்கு என 03 பணியிடம் என மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate, Ph.D Degree-பெற்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / PSU நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Associate Professor, Assistant Professor பணிகளுக்கு சமமான பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராகவும் இருக்கலாம்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 67 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Associate Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,52,241/- மாத சம்பளமாக தரப்படும்.
- Assistant Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,30,797/- மாத சம்பளமாக தரப்படும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 26.05.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
ESIC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்காக நேர்காணல் நடைபெற உள்ளதால், இன்றே விண்ணப்பங்களை தயார் செய்து நாளை தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.