EPFO சந்தாதாரர் எண்ணிக்கை 13.73% அதிகரிப்பு – தமிழகம் முன்னிலை!!
நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்தும் புதிய சந்தாதாரர் எண்ணிக்கை 13.73% அதிகரித்துள்ளது. இதில் தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎஃப்ஓ:
இபிஎஃப்ஓ செலுத்தும் புதிய சந்தாதாரர் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 13.73 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 11.22 லட்சமாக இருந்த சேர்க்கை எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 12.76 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போது இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, முதல் கட்ட புள்ளி விவர அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிதாக 12.76 லட்சம் சந்தாதாரர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி – புதிய வடிவில் பாடங்கள்!!
கடந்த மார்ச் மாதத்தில் வேலையை விட்டு சென்றவர்களின் எண்ணிக்கை 87,821 ஆக குறைந்த நிலையில் வேலையில் மீண்டும் சேர்பவர்களின் எண்ணிக்கை 92,864 ஆக அதிகரித்தது. மேலும் 2020-21 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ திட்டத்தில் 77.08 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் இதன் எண்ணிக்கை 78.58 லட்சமாக இருந்தது. கடந்த 2020 சார்பில் மாதத்தில் இந்த திட்டத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கையை விட வெளியே செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.
TN Job “FB Group” Join Now
பின் மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருவதால் தற்போது 2021 ஏப்ரலில் சந்தாதாரர்கள் 12.76 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் முதன்முறையாக 6.89 லட்சம் உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களை பொறுத்தவரை தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கையில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.