PF பயனர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் தொகை விரைவில் செலுத்தப்படும்! EPFO அறிவிப்பு!
2020-21 ஆம் ஆண்டுக்கு PF வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான PF வட்டித்தொகை மிக விரைவில் செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிஎப் வட்டி விகிதம்:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வருகின்றனர். பணிக்காலம் நிறைவு பெற்ற பின் பிஎப் தொகை வழங்கப்படுகிறது. அவ்வபோது ஈபிஎப்ஓ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் பிஎப் தொகையிருந்து எந்த ஆவணமும் இல்லாமல் 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு – சிறப்பு சேவை அறிமுகம்!
மேலும் பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்புத்தொகை, இதில் எது குறைவோ அந்த தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். பிஎஃப் கணக்கில் வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், அதன் வட்டி மீது வரி விதிக்கப்படும். ஈபிஎப்ஓ 2020 – 2021 ஆம் ஆண்டுக்கு PF வட்டி விகிதம் 8.5% வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 15 நாட்களுக்குள் வழங்க உத்தரவு!
அதனை தொடர்ந்து தற்போது 2020 – 2021 ஆம் நிதியாண்டுக்கான PF வட்டித்தொகை மிக விரைவில் செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் ஏராளமானோர் பணத்தை எடுத்ததன் காரணமாகவும், குறைந்த அளவில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் டெபாசிட் செய்யப்பட்டததாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிஎப் தொகை இருப்பை தெரிந்து கொள்ள EPFOHO UAN ENG என்ற வடிவில் UAN நம்பரை வைத்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். அதன் பிறகு உங்களின் செல்போனுக்கு பிஎஃப் பேலன்ஸ் தொகை உடனடியாக மெசேஜ் செய்யப்படும்.