பொறியியல் படிப்புக்கு நுழைவு தேர்வு அவசியம் – தமிழக முதல்வரிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு முறையை அவசியமாக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தரும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நுழைவு தேர்வு:
தமிழகத்தில் பொறியியல் பாடத்தில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு நுழைவு தேர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தரும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி தமிழக முதல்வரிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முன்னதாக 2005ம் ஆண்டில் தமிழகத்தில் 220 பொறியியல் கல்லூரிகள் இருந்தது. தற்போது 520 க்கும் அதிகமான கல்லூரிகள் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் 2 லட்சம் மாணவர்கள் படிப்பை முடிக்கின்றனர்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை – சியுசிஇடி நுழைவு தேர்வு ரத்து!!
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் ஆய்வில் பொறியியல் பட்டம் பெற்ற 80% மாணவர்களில் போதிய திறன் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக சுகாதார பணியாளர்கள் பணிக்கு அதிக அளவிலான பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் அவல நிலை நிலவி வருகிறது. மாணவர் சேர்க்கையில் தரம் இல்லாதது, மற்றும் கல்லூரிகளின் தரம் உயராதது போன்ற காரணங்களால் தான் இந்த நிலை உள்ளது.
TN Job “FB Group” Join Now
பொறியியல் படிப்பில் சேர ஒரு மாணவருக்கு போதிய புத்திசாலித்தனமும் படிப்பை பற்றிய நுண்ணறிவும் உள்ளதா என கண்டறிய நுழைவு தேர்வு அவசியமாகும். இன்ஜினியரிங் மருத்துவம் போன்ற தொழில் கல்வியில் தரமான மாணவர்களை சேர்க்க நுழைவு தேர்வு முறை தான் சரியான வழி. பிளஸ் 2 பாடங்களை மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் பெற வைக்கின்றனர். அதனால் அவர்களால் நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. பிளஸ் 1 பாடங்களை நடத்துவதே இல்லை. அதிக கட்டணம் செலுத்துவோர் மட்டுமே பொறியியல் படிப்பில் சேரும் நிலை உள்ளது. எனவே தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு அவசியம் என்று அந்த கடிதத்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.