கோவை பள்ளிகளில் ஜூன் 28 முதல் மாணவர் சேர்க்கை? கல்வித்துறை திட்டம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் கோவை மாவட்டத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி முதல் புதிய தளர்வாக கொரோனா பாதிப்புகள் குறைந்த மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாக பணிகளுக்காக திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பாதிப்பு அதிகமாக காணப்படும் கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் – முதல்வர் உறுதி!
இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 28ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக வருகிற 28ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது பொள்ளாச்சி கல்வி மாவட்ட ஆசிரியர்கள் கூறுவதாவது, கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வருகிற ஜூன் 28ம் தேதிக்கு முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த வார இறுதி வரையில் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மாணவர் சேர்க்கை துவங்குவதற்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Already admission is going on Coimbatore government Schools