பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் கவனத்திற்கு – மாநில முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! விரைவில் நடைமுறை!
உத்திரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புக்கான பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இந்தி மொழி வரவுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி:
இந்தியாவில் தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி கொள்கை வலியுறுத்தப்படுகிறது. தாய்மொழி அல்லது வட்டார மொழி, ஆங்கிலம், வேறொரு மொழி ஆகியவையே இந்த மும்மொழிக்கொள்கையின் தத்துவம். இந்த நிலையில் மத்திய கல்வி நிறுவனங்களின் முழுவதுமாக இந்தி மொழியை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. தற்போது கூட மத்திய உள்துறை அமைச்சர் ஆங்கிலத்தை நீக்கி இந்தியை கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – அக். 17 விண்ணப்பிக்க இறுதி நாள்!
இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தி மொழியிலான எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் அவர்களும் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் எம்பிபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இனி அவர்களுக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து அவர் தனது மாநிலமான உத்திரபிரதேசத்தில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு விரைவில் இந்தியில் கல்வி கற்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அம் மாநிலத்தில் கல்வியை முழுவதுமாக ஆங்கிலத்திலிருந்து விடுவிப்போம். மேலும் யார் வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் படிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் இந்தியில் கல்வியைத் தொடங்க வேண்டும் என்பது எங்கள் கனவு என்றும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்