12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – அக். 17 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - அக். 17 விண்ணப்பிக்க இறுதி நாள்!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - அக். 17 விண்ணப்பிக்க இறுதி நாள்!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – அக். 17 விண்ணப்பிக்க இறுதி நாள்!

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Protection Officer, Counsellor, Social Worker, Data Analyst, Accountant போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27,804/- மாத ஊதியமாக கொடுக்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

DCPU Chennai வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Protection Officer (Institutional & Non-Institutional Care), Legal cum Probation Officer, Counsellor, Social Worker, Accountant, Data Analyst, Assistant cum Data Entry Operator, Outreach Workers ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 11 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 12ம் வகுப்பு, Diploma, BA, BCA, LLB, Graduate Degree அல்லது Master Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 40 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 40 வயது பூர்த்தி அடைந்தவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம். இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம்\தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,592/- முதல் ரூ.27,804/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

Exams Daily Mobile App Download

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, எண்‌.58, சூரிய நாராயணன்‌ சாலை,இராயபுரம்‌, சென்னை-600 013 என்ற முகவரிக்கு 17.10.2022 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!