ஆகஸ்ட் 31க்குள் பொறியியல் படிப்பு கவுன்சிலிங் – AICTE உத்தரவு!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிங் (AICTE) உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கவுன்சிலிங்:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக மாநிலங்கள் தோறும் கடந்த 2 மாதங்களாக முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக மாநிலங்களுக்கான பொதுத்தேர்வுகள், CBSE என அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், அடுத்தாக உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களுக்கு மட்டும் தேர்வு மதிப்பெண்களை வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.
ஆவின் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி – அமைச்சர் நாசர் அறிவிப்பு!!
அந்த வகையில் வரும் ஜூலை 31 ஆம் தேதி அன்று +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது துவங்கியுள்ளது. இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகளுக்கான கால அட்டவணையை AICTE வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் படி, ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், அதன் எல்லைக்குட்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்தை வழங்கும் பணிகளை இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மேலும் கல்லூரிகளில் புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதலும், மற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் புதிய வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.