ENG vs IND 3வது டெஸ்ட் – கோஹ்லிக்கு முன் மைதானத்திற்குள் பேட் உடன் நுழைந்த நபர்! மீண்டும் பரபரப்பு!
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே லார்ட்ஸ் டெஸ்ட்டின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர், லீட்ஸ் டெஸ்ட்டின் போதும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா – இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 78 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 423 ரன்கள் குவித்து மொத்தம் 345 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 3 ஆம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கியது. மேற்கொண்டு 9 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி கைவசம் இருந்த 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
Tokyo Paralympics 2020: இந்தியாவிற்கு முதல் பதக்கம் உறுதி! இறுதிப்போட்டியில் பவினா படேல்!
இதனால், 354 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 121 ரன்கள் குவித்தார். பந்து வீச்சில் இந்திய அணியில் முகம்மது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் ஏற்கனவே இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்வோ என்ற ரசிகர் இரண்டாவது டெஸ்ட்டின் போது இந்தியாவின் சீருடையை அணிந்து கொண்டு சக ஃபீல்டர் போல மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர் காவலர்கள் அவரை எச்சரித்து மைதானத்தில் இருந்து வெளியே அனுப்பினார்கள்.
IND vs ENG 3வது Test – கேஎல் ராகுல் மீண்டும் ஏமாற்றம்! தடுமாற்றத்தில் இந்திய அணி!
இந்நிலையில் லீட்ஸில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட்டின் போதும் முழு KIT உடன் ஜார்வோ இந்திய பேட்ஸ்மேன் போல ஆடுகளம் வரை சென்றுள்ளார். மீண்டும் காவலர்கள் அவரை வெளியேற்ற முயற்சி செய்த போது அவர் போக மறுத்து சிறு குழந்தை போல ஆடம் பிடித்துள்ளார். அவரின் இந்த செயலை பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும் பாதுகாப்புகளை மீறி ரசிகர் ஒருவர் மீண்டும் மைதானத்திற்குள் நுழைவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ரோஹித் சர்மா அவுட் ஆன பிறகு கேப்டன் விராட் கோஹ்லி களத்திற்கு வரும் வேளையில் இவர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.