கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு – பிப்.21ம் தேதி தொடக்கம்!
ஈரோடு மாவட்டத்தில் கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பாக மார்ச் 21ம் தேதி பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பயிற்சி:
தமிழகத்தில் மக்கள் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் வேலைவாய்ப்பு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. கொரோனா ஊரடங்கால் தங்களின் வேலைகளை இழந்தவர்கள் வேலை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அரசு வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை வெளியாகி வருகிறது. இந்த பணியிடங்களுக்கான தேர்வு குறித்து தேர்வர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த மாதம் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு என்று தகவல் வந்துள்ளது.
Jio, Airtel & Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
அதனை தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி பயிற்சி மையங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி மக்களுக்கு அவசிய ஒன்றாக உள்ளது. இந்த பயிற்சிகள் மூலம் அவர்கள் சுய தொழில் செய்வதற்கான அறிவை பெறுகின்றனர். இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பாக மார்ச் 21ம் தேதி வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது.
ஊரடங்கு நீக்கம், நேரடி வகுப்புகளுக்கு அனுமதி – அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இந்த பயிற்சி வகுப்பு தொடர்ந்து 10 நாட்களுக்கு மார்ச் 3 வரை இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பில் மசாலா பொடிகள், அப்பளம், ஊறுகாய் போன்றவை தயாரித்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும். மேலும் கிராம ஊராட்சிகளை சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகம் 2வது தளம், கொல்லம்பாளையம் புறவழிச் சாலை – ஈரோடு என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.