ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
இந்தியாவில் உள்ள ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு:
நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழக அரசும் பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் வைத்து இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கின் நிறைய தளர்வுகளை விடுத்துள்ளது அரசு. அதன் காரணமாக சமீபத்தில்TNPSC குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அறிவித்து இருந்தது. அதன் மூலம் நிறைய பட்டதாரிகள் பயன் பெற்று கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்ததாக TNPSC குரூப் 4 தேர்வுகள் குறித்தும் அறிவித்து உள்ளது. குரூப் 2 தேர்வுக்கு Syllabus வெளியாகி பரவி வருகிறது. இது தவிர தனியார் துறையும் தங்கள் சார்பில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. மேலும் இது மட்டுமல்லாமல் தற்போது இந்திய ரயில்வே துறையும் அறிவித்து உள்ளது.
ExamsDaily Mobile App Download
மேலும் இந்திய ரயில்வே துறையில் பணியாற்ற வேண்டும் என்று காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் வேலை பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த நிலையில் தற்போது ரயில்வே துறையில் மேலாளர் பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதற்கு சம்பளமாக தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளின் 5 வது பிரிவின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – கால அவகாசம் நீட்டிப்பு!
அதனை தொடர்ந்து, வயது வரம்பாக 18 முதல் 42 வயது வரை அறிவிக்கப்படும் என்ற தெரிவித்து உள்ளனர். மேலும் விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி என்றும் அறிவித்து உள்ளனர். மேலும் கல்வி தகுதியாக, தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் பிரிவுகள், பணிமனைகள், தலைமையகம் போன்ற இடங்களில் பணிபுரியும் பணியாளராக இருக்க வேண்டும் என்றும், மேலும் தேர்வு செய்யும் முறையாக கணினி முறையில் தேர்ந்தெடுத்துள்ளனர்.