விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – தொழில் முதலீட்டு கழக இயக்குனர் உத்தரவு!
தமிழகத்தில் சுயதொழில் திட்டங்களை ஒருங்கிணைத்து வங்கிகளின் உதவியுடன் படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. ஊரடங்கால் வணிகங்கள் முடங்கியதால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் பல்வேறு படித்த இளைஞர்களை வேலை இழக்க செய்துள்ளது. இதனால் மாத வருமானமின்றி தங்கள் குடும்பத்தை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர். மேலும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிறுவனங்களில் பணியிடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
Tokyo Olympics 2020 : இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி! இறுதி சுற்றில் ரவிக்குமார்!
தமிழக அரசு மாவட்ட அரசு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து விழுப்புர மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவது குறித்து தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக நிர்வாக இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சிறப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் சுய தொழிலை ஊக்குவிக்க தேவையான திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. சுய தொழில் திட்டங்களை ஒருங்கிணைத்து வங்கிகளின் உதவியுடன் படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 10 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.