தமிழகத்தில் மின் இணைப்பு எண் – ஆதார் இணைப்பு .. ஜன. 31 கடைசி நாள் – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்பு .. ஜன. 31 கடைசி நாள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்பு .. ஜன. 31 கடைசி நாள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் இணைப்பு எண் – ஆதார் இணைப்பு .. ஜன. 31 கடைசி நாள் – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பயனர்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் விரைவில் முடிவடையவுள்ளதால் மின் பயனர்கள் விரைந்து இப்பணியை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதார் – மின் இணைப்பு எண்:

தமிழகத்தில் அரசின் அனுமதிக்கிணங்க மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டது. இதனையடுத்து மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆன்லைன் வாயிலாகவும் மின்வாரிய அலுவலகம் மூலம் நேரடியாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2023ல் 13 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் Airbus நிறுவனம் – வெளியான அப்டேட்!!

Follow our Instagram for more Latest Updates

கடந்த மாதம் சில சர்வர் கோளாறு காரணமாக ஆன்லைன் வாயிலாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் சில சிக்கல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மின் வாரியம் இத்தகைய பணியை மேற்கொள்ள பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்கியது. அதன் படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன. 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் விரைந்து இத்தகைய பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இனி மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!