2023ல் 13 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் Airbus நிறுவனம் – வெளியான அப்டேட்!!
உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் இந்த சமயத்தில், ஏர்பஸ் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் 13,000 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
ஏர்பஸ் நிறுவனம்
விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிலையில் தற்போது சூழ்நிலையில் பொருளாதார மந்தநிலை காரணமாக ஏகப்பட்ட நிறுவனங்கள் பணியாளர்களை வேலை நிறுத்தம் செய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் பல நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு முறையை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலைமையில் ஏர்பஸ் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் 13,000 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தங்கத்தின் விலை அதிரடி சரிவு.. மக்களை மகிழ்ச்சி அளிக்கும் இன்றைய விலை நிலவரம்!!
Follow our Instagram for more Latest Updates
புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள், அதன் வணிக விமானங்கள் ரேம்ப்-அப் மற்றும் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ஹெலிகாப்டர்களில் வேலை செய்வார்கள். மேலும் இந்த நிறுவனத்தில் சுமார் 7000 புதிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். அதில் பாதி பணியிடங்கள் ஐரோப்பாவிலும், மற்ற பணியிடங்கள் நிறுவனத்தின் உலகளாவிய நெட்வொர்க் முழுவதும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது 1,30,000 க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.