தமிழக மக்கள் கவனத்திற்கு.. மாற்றப்படும் மின் கட்டண முறை – குறையுமா கரண்ட் பில்?

0
தமிழக மக்கள் கவனத்திற்கு.. மாற்றப்படும் மின் கட்டண முறை - குறையுமா கரண்ட் பில்?
தமிழக மக்கள் கவனத்திற்கு.. மாற்றப்படும் மின் கட்டண முறை - குறையுமா கரண்ட் பில்?
தமிழக மக்கள் கவனத்திற்கு.. மாற்றப்படும் மின் கட்டண முறை – குறையுமா கரண்ட் பில்?

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் வெளியிட்டுள்ளார்.

மின் கட்டணம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் தற்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வுக்கு மத்தியில் மின் கட்டணத்தின் விலை உயர்வு சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது, தேர்தலுக்கு முன் முதல்வர் அளித்த வாக்குறுதி படி, விரைவில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி செய்தி.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை – சவரன் ரூ. 240 அதிகரிப்பு!

Follow our Instagram for more Latest Updates

தற்போது மின் கணக்கெடுப்பு செய்வதற்கான பணியாளர் குறைவாக உள்ளதால், இம்முறையை செயல்படுத்த முடியாமல் உள்ளது. அதனால் முதலில் மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்மார்ட் மின் மீட்டர் அமைப்பதற்கான ‘டெண்டர்’ விடும் பணிகளும் நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார்.

நுகர்வோர் தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை 400 யூனிட் பயன்படுத்துகிறார் எனில் நீங்கள் ரூ.1,125 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்தால் இந்த கட்டணம் பாதியாக குறையும். அதாவது 2 மாதத்திற்கு நீங்கள் 400 யூனிட் பயன்படுத்துகிறீர்கள் எனில் இதில் ஒரு மாதத்திற்கு 200 யூனிட் மட்டுமே பயன்படுத்தி இருப்பிர்கள். அதனால் 200 யூனிட்க்கான கட்டணமாக ரூ.225 மட்டுமே செலுத்தினால் போதும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!