தமிழக மின் நுகர்வோருக்கு சூப்பர் அறிவிப்பு – இனி செயலி மூலம் மின் கணக்கீடு!
தமிழ்நாடு மின்சார வாரியம் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது செல்போன் செயலி மூலம் மின் கணக்கீடு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
கணினி மையம்:
தமிழகத்தில் கடந்த 2021 மே மாதம் பதவியேற்ற திமுக தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மற்ற துறைகளை தொடர்ந்து மின்சாரத்துறையிலும் பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் மின் சார்ந்த பணிகள் தடையின்றி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த வருடம் நிலவிய கொரோனா இரண்டாம் அலையின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்துவதற்கு சில சலுகைகள் வழங்கப்பட்டது.
TCS நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதன் தொடர்ச்சியாக தற்போது மொபைல் போன் செயலி மூலம் மின் கட்டணத்தை கணக்கீடு செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. கடந்த 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த செயலியை மின் நுகர்வோர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கட்டணம் கணக்கீடு செய்யலாம் மின் கட்டண ரசீது மின் பயனர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட 27 பகுதிகளில் இந்த செயலி சரியாக செயல்படுவதாக தகவல் வந்துள்ளது. மின் பயனர்கள் இனி மின் கணக்கீட்டாளர் களுக்குக்காக காத்திருக்காமல் தாங்களாகவே கட்டணத்தை கணக்கீடு செய்யலாம்.
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!
இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு வருவதாக மின் வரியா அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் வீண் விரயம் கால வியரம் தவிர்க்கப்பட்டு பல்வேறு நிலையில் நஷ்டம் குறையும் என்றும் கூறுகின்றனர். சென்னை மற்றும் வேலூரில் செயலியை பயன்படுத்த கணக்கீட்டாளர்கள் கேட்டுக்கொள்ள பட்டதாகவும் டேன்ஜெட்கோ வின் உயர் அதிகாரி தெரிவித்தார். சென்னை மற்றும் வேலூரில் செயலியை பயன்படுத்த மின் பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.