இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா – எகிப்து அதிபர் பங்கேற்பு!! வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு!!
இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசு தின விழா:
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாட்டின் 74 – வது குடியரசு தினவிழா ஜன. 26ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து முப்படைகள் சார்பாக அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஒத்திகைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ரேஷன் அரிசியின் அளவை குறைக்க திட்டம் – குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் கொடுக்கும் தெலுங்கானா அரசு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் அன்றைய தினம் தேசப்பற்றை பறைசாற்றும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும் இந்தியாவின் 50 போர் விமானிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வீர சாகசங்களை நிகழ்ந்தவுள்ளனர். இந்த ஆண்டு சுமார் 42,000க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொள்வார்கள் என்று ராணுவ அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல்சிசி கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இவர் 3 நாள் பயணமாக ஜன. 24ம் தேதி இந்தியா வரவுள்ளார். குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து நாட்டின் படைப்பிரிவும் இந்த ஆண்டு கலந்து கொள்ளவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.