ரேஷன் அரிசியின் அளவை குறைக்க திட்டம் – குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் கொடுக்கும் தெலுங்கானா அரசு!
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரிசியின் அளவை குறைத்து உள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
அரசின் அறிவிப்பு:
மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் தேவை உள்ள மக்களுக்கு தான் கிடைக்க வேண்டும் என்று அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. தேவையற்றவர்கள் அரசின் உதவிகளை பெற்றுக் கொள்வதால், உண்மையாகவே தேவை உள்ளவர்கள் பலருக்கும் அந்த உதவிகள் கிடைக்காமல் போய்விடுகின்றது. இதேபோல், ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகளில் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த பெயர்கள் நீக்கம் செய்யும் பணிகளும் நடந்தது.
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு – ஆணையை வழங்கிய முதல்வர்!
இதனை தொடர்ந்து தவறுதலாக பெயர்களை நீக்கம் செய்யப்பட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் புகார்களை 1967 மற்றும் 1800 180 287 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவித்து கொள்ளலாம் என்றும், இதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நாட்டில் உணவு தானியங்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல மாநில ரேஷன் கடைகளில் கோதுமை உள்ளிட்ட தானியங்களுக்கு பதிலாக அரிசி தான் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் அட்டை விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை விட 1 கிலோ குறைவாக தான் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.