மீண்டும் மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற கோரிய மனு விசாரணை – தமிழக அரசு தரப்பு வாதம் !
கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியமைத்த சட்டத்தை திருத்தம் செய்ய கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் தற்போது தமிழக அரசு முக்கிய கருத்துகளை பதிவிட்டுள்ளது.
கல்வி:
கடந்த 1975ம் ஆண்டில் நிலவிய நெருக்கடி நிலையின் போது மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய அரசு பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. மேலும் அதற்கேற்றது போல அரசியல் சட்டம் 42 -ல் தேவையான திருத்தங்களையும் மேற்கொண்டது. அப்போதிலிருந்து தமிழக அரசு கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு தரப்பில் இருந்து வாதிடப்பட்டது. அதில் எந்த மொழி, எந்த பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யும். மேலும் மத்திய அரசுக்கு உயர் கல்வியில் தரம் குறித்து மட்டுமே ஆய்வு செய்ய உரிமை உண்டு என்று கூறப்பட்டது.
G20 மாநாடு – இந்தியா தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து குறிப்பிட்ட இந்த மொழியில் தான் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுக்க முடியாது. அத்துடன் இந்தியில் தான் படிக்க வேண்டும் என்று கூறினால் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மேலும் மத்திய அரசை விட, மாநில அரசுகளே எப்போதும் கல்விக்காக அதிக அளவில் செலவு செய்கிறது என்று திமுக எம்.எல்.ஏ கூறியுள்ளார்.