ECIL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Project Engineer பதவிக்கு என 12 காலிப்பணியிடங்கள் மட்டும் தற்போது நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் அனைத்து விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இதன் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Electronics Corporation of India Limited (ECIL) |
பணியின் பெயர் | Project Engineer |
பணியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ECIL காலிப்பணியிடம்:
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Project Engineer பதவிக்கு ECE, EEE, ETE துறைக்கு 06 பணியிடம் மற்றும் MECH, ECE, CSE துறைக்கு 06 பணியிடம் என மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ECIL கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய ECE / EEE / ETE / MECH / ECE / CSE போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech டிகிரி முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ECIL வயது வரம்பு:
31.01.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 33 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் இப்பணிக்கு அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ECIL ஊதியம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு பணியின் போது ரூ.40,000/- முதல் ஆண்டுக்கு, ரூ.45,000/- இரண்டாம் ஆண்டுக்கான ஊதியமாக அளிக்கப்படும்.
ECIL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் document verification செய்த பின் இப்பணிக்கு நேரடியாக நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
ECIL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழ் உள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.02.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று கலந்து கொள்ளவும்.