தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயம் – இன்று முதல் அமல்!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல செல்ல இ-பதிவு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இ-பதிவு கட்டாயம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மே 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது போக்குவாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர தேவைகளுக்கு வெளியே செல்லுவோருக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு அமலுக்கு வருகிறது. இ-பதிவு செய்ய முதலில் https://eregister.tnega.org என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் செல்போன் எண்ணை பதிவு செய்த பின்னர் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய OTP எண் வரும். அதனை பதிவு செய்த பின்னரே உள்ளே நுழைய முடியும்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மத்திய கல்வித்துறையுடன் ஆலோசனை!
அதன் பின்னர் அதில் மூன்று வகையான பயணம் குறித்து இருக்கும். தனி நபர், குழுவினர் சாலை வழி பயணம், ரயில், விமானம் மூலமாக பயணம் போன்று தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும். தொழில் நிறுவன ஊழியர்கள் பயணம் செய்ய அதற்கான தனி பதிவு செய்ய வேண்டும். தனிநபர்கள் நான்கு வகையான காரணங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய முடியும்.
TN Job “FB Group” Join Now
திருமணம், மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரியங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே போக வேண்டும். தனிநபர்கள் வாகனங்களில் பயணம் செய்ய இருந்தால் வாகன எண், அதன் வகை போன்றவற்றை தெரிவிக்க வேண்டும். ரயில் அல்லது விமானம் மூலமாக பயணம் செய்ய பயண சீட்டின் எண், ரயில், விமானத்தின் எண், இருக்கைகளின் விவரம் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- குடும்ப அட்டை
- ஆதார் அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- நிரந்தர கணக்கு எண்
- கடவுச்சீட்டு
மேற்கண்ட எதாவது ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்த பின்னர் மூன்று நிலைகளில் கடந்த பின்னரே இ-பதிவு நிறைவு பெறும். அடிப்படை தகவல்களை பதிவு செய்த பிறகு, எங்கிருந்து எங்கே பயணம் செய்கிறீர்கள், என்பதை பதிவு செய்த பின்னர் இ-பதிவு நிறைவு பெறும். அதன் பின்னர் பதிவு செய்ததற்கான அத்தாட்சி கிடைக்கப்பெற்று அதனை கொண்டு சிக்கல் இல்லாமல் பயணம் செய்யலாம்.
E pass
Pattiku udampu sarila rompa circle eruku please help me
Pattiku udampu sarila rompa circle eruku please help me E pass venum
Papa ku kathu kuthu athana yenaku E pass venum
Papa ku motai adichi kathu kuthu athana nan rasipuram poganum athana E pass venum..🙏
Papa ku motai adichi kathu kuthu athana yenaku E pass venum nan rasipuram poganum