வருமான வரி தாக்கல் செய்ய டிச.31 (நாளை) கடைசி நாள் – மீறினால் இரு மடங்கு அபராதம்!!

0
வருமான வரி தாக்கல் செய்ய டிச.31 (நாளை) கடைசி நாள் - மீறினால் இரு மடங்கு அபராதம்!!
வருமான வரி தாக்கல் செய்ய டிச.31 (நாளை) கடைசி நாள் - மீறினால் இரு மடங்கு அபராதம்!!
வருமான வரி தாக்கல் செய்ய டிச.31 (நாளை) கடைசி நாள் – மீறினால் இரு மடங்கு அபராதம்!!

2019-2020ம் ஆண்டிற்கான வருமானவரி தாக்கல் செய்யாதவர்கள் நாளைக்குள் தாக்கல் செய்யாவிடில் அவர்களுக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலக்கெடு:

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடப்பு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ம் தேதி கடைசி தேதியாக இருக்கும். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் மக்களின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து இருந்ததே இதற்கு காரணம். அந்த வகையில் 2019-2020ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு இந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நீடித்து அரசு உத்தரவிட்டது.

742 கணினி ஆசிரியர்களின் தேர்வு  பட்டியல் வெளியீடு – ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்!!

காலக்கெடு நீட்டிப்பு:

டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நீடித்தும் மக்கள் அதை மேலும் சில காலம் நீடித்து வழங்க கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற அரசு மேலும் 3 மாதங்கள் நீடித்து மார்ச் 31க்குள் வருமானவரி தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தது.

வழக்கமான அபராதம்:

வழக்கமாக ஜூலை 31ம் தேதிக்குள் வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்வதற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். அப்படியும் தாக்கல் செய்யாதவர்கள் மார்ச் 31க்குள் தாக்கல் செய்து கொள்ளலாம். ஆனால் அபராதம் ரூ.10,000 விதிக்கப்படும்.

கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் – ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!!

இருமடங்கு அபராதம்:

இம்முறை வருமானவரி தாக்கல் செய்வதற்கு டிச.,31ம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டதால் நாளைக்குள் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படாது. ஆனால் ஜனவரி 1 முதல் மார்ச் 31ம் தேதி வரை தாக்கல் செய்யும் நபர்கள் ரூ.10,000 அபராதம் செலுத்தியாக வேண்டும்.

ஏனென்றால் இம்முறை தாமதமாக தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் தாமதக்கட்டணத்தை வசூலிப்பதற்கான வருமான வரிச்சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே இருமடங்கு அபராதத்தை தவிர்க்க வேண்டுமானால் நாளைக்குள் வருமான வரி தாக்கல் செய்தாக வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!