ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு – அரசின் செம அறிவிப்பு!
வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை இன்று அம்மாநில அரசு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பரிசுத் தொகுப்பு:
இந்தியாவில் ரேஷன் கார்டு திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைவான விலையில் மாதந்தோறும் மளிகை பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு தரமான மற்றும் தேவையான பொருட்களை வழங்கும் வண்ணம் மத்திய உணவு வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்தந்த மாநில அரசுகளும் நலத்திட்ட உதவிகளை ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு வழங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பை வழங்கியது. அதில் அரிசி, பருப்பு, வெல்லம், சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் வைக்க தேவையான பொருட்களும் மற்றும் பிற மளிகை பொருட்கள் என 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த திட்டம் தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் பாராட்டை பெற்றது. அதனை தொடர்ந்து வரும் அக்.24ம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அக்.26 வரை விடுமுறை – மாநில அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு!
Exams Daily Mobile App Download
அதாவது அம்மாநில ரேஷன் கடைகள் வாயிலாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவு செய்யப்பட்டு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அம்மாநில அரசு ரூ. 513 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 1.5 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்