மார்ச் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விநியோகம் – முதல்வர் அறிவிப்பு!

0
மார்ச் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விநியோகம் - முதல்வர் அறிவிப்பு!

மார்ச் 1ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு சிறுதானிய மாவு வகைகளை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

சிறுதானிய விநியோகம்:

ஆந்திரா மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு நடந்து வருகிறது.  முதல்வர் பதவியை எட்டியவுடன் மாநிலம் முழுவதும் எம்.டி.யு வாகனங்களை அறிமுகம் செய்தார். அதாவது ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் வீடுகளை நோக்கி செல்லும் திட்டம் ஆகும். தற்போது  மார்ச் ஒன்றாம் தேதி முதல் எம்டியூ வாகனங்கள் வாயிலாகவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு சோளம், ராகி, கம்பு, உளுந்து போன்ற சிறு தானிய மாவு பாக்கெட்டுகளை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் 16ஆம் தேதி வரை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை இந்த சிறுதானிய மாவு வகைகளை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு ஏற்ப வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதல் கட்டமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!