தமிழக ரேஷன் கடைகளில் பழைய அரிசி விநியோகம் – பொதுமக்கள் புகார்..அமைச்சர் ஆய்வு!

0
தமிழக ரேஷன் கடைகளில் பழைய அரிசி விநியோகம் - பொதுமக்கள் புகார்..அமைச்சர் ஆய்வு!
தமிழக ரேஷன் கடைகளில் பழைய அரிசி விநியோகம் - பொதுமக்கள் புகார்..அமைச்சர் ஆய்வு!
தமிழக ரேஷன் கடைகளில் பழைய அரிசி விநியோகம் – பொதுமக்கள் புகார்..அமைச்சர் ஆய்வு!

தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கோவை மாவட்ட ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயனாளிகள் ரேஷன் அரிசி விநியோகம் குறித்து புகார் அளித்தனர்.

ரேஷன் அரிசி:

தமிழக ரேஷன் கடைகளில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரிசி மற்றும் பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை குறைந்த விலையில் ரேஷன் அட்டைதாரர்கள் பெற்று வருகின்றனர். இதில் அரிசி தரமற்றதாக இருப்பதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் அரிசியில் கல், மண் உள்ளிட்டவைகள் கலந்திருப்பதால் உண்பதற்கு தகுதியற்றதாக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.

தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு DEO பதவி – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!

இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை பயனாளிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கோவை – ராமநாதபுரம் சாலையில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவரிடம் அங்குள்ள ரேஷன் அட்டைதாரர்கள், கடையில் பழைய அரிசியை ஊழியர்கள் விநியோகம் செய்வதாக புகார் அளித்தனர். இது குறித்து பேசிய அமைச்சர் பழைய அரிசி வழங்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இனி பழைய அரிசி விநியோகிக்கப்படாது. புது அரிசி மட்டுமே வழங்கப்படும் என்று கூறி பொதுமக்களுக்கு பதில் அளித்தார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!