தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு DEO பதவி – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!

0
தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு DEO பதவி - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!
தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு DEO பதவி - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!
தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு DEO பதவி – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய 15 தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

பதவி உயர்வு:

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தொடக்க நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு தனித்தனியாக கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாதல் – வெளியான பட்டியல்… நிதி ஆயோக் விளக்கம்!

அதன்படி தற்போது செங்கல்பட்டு மாவட்டம் காட்டுக்கரணை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முரளி அவர்கள் மதுரை மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து தேனி மாவட்டம் அப்பிபட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை ஆசிரியர் லதா அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதி கல்வி அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமாவதி திருநெல்வேலி மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மதுரை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குருநாதன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட இடைநிலை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களை தொடர்ந்து பிற தலைமையாசிரியர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!