திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | திண்டுக்கல் வருவாய் துறை |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 15.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்:
வேடசந்தூர் வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Police “FB Group” Join Now
கிராம உதவியாளர் வயது வரம்பு:
வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள், தாழ்த்தப்ட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகள் நாளது தேதி வரை புதுப்பிக்கபட்டிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் வேடசந்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
கிராம உதவியாளர் கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
கொல்லப்பட்டி கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (பி.சி.யில்,முஸ்லீம் அல்லாதவர்) (பெண்கள்) விண்ணப்பிக்கலாம். குட்டம் கிராமத்திற்கு பொதுப்பிரிவினைச் சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர்(சி மற்றும் டி பிரிவு) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வேல்வார்கோட்டை கிராமத்திற்கு எஸ்.ஸி பிரிவில் (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இப்பிரிவில் அருந்ததியினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தென்னம்பட்டி கிராமத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் (ஆண் /பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இராமநாதபுரம் கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த (பி.சி.யில்-முஸ்லீம் அல்லாதவர்) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
TN விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேடசந்தூர் வட்டாட்சியர் திருமதி பா.ஆ.லதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
Job