திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் பண்டகசாலை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் வத்தலக்குண்டு நகரில் உள்ள கூட்டுறவு மருந்தகத்திற்கு வெளிக்கொணர்வு அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய மருந்தாளுனர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு 16-09-2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை |
பணியின் பெயர் | மருந்தாளுனர் |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு காலிப்பணியிடங்கள்:
மருந்தாளுனர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து D.Phram/ B.Phram தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மருந்தாளுனர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட்., திண்டுக்கல். கூட்டுறவு மேலாண்மை நிலையம், பழனி பைபாஸ் என்ற முகவரிக்கு தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.