தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொது மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
வழிபாட்டு தலங்கள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று பரவிய நிலையில் இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் கொரோனா பெருந்தொற்று உருமாற்றம் அடைந்து பல்வேறு அவதாரங்களை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் மற்றும் ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து கொரோனாவும் வேகமெடுத்து பரவி வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தினசரி நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு, புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
இந்த தடை பொதுமக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதே தவிர கோயில்களில் தினசரி நடைபெறும் பூஜைகள் அனைத்தும் நடந்த வண்ணம் இருந்தது. இத்தகைய உத்தரவானது கடந்த ஜன.14ம் தேதி முதல் நேற்று வரை அமலில் இருந்தது. ஏனெனில் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை பெருமளவு தவிர்க்க வேண்டும் என்பதற்காக இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வழிபாட்டு தலங்களுக்கு சென்று தரிசனம் பெற்று வருகின்றனர்.