தனியார் பள்ளிகளில் EWS சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தனியார் பள்ளிகளில் EWS சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அட்டை
டெல்லியில் உள்ள EWS/DG/CWSN பிரிவுகளின் கீழ் தனியார் உதவிபெறாத பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் என அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை இடைநீக்கம் செய்த ஒற்றை நீதிபதியின் உத்தரவை மறுத்து, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் EWS (பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு) பிரிவில் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் ஆதார் அட்டையை வழங்குவது இப்போது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் விமான டிக்கெட் கட்டணம் ரூ.1000 வரை உயர்வு – பயணிகள் அவதி!
மேலும் EWS/DG/CWSN (பின்தங்கிய குழு/சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள்) பிரிவின் கீழ் சேர்க்கைக்கு “பெற்றோர்/பாதுகாவலரின் ஆதார் கட்டாயம்” என்று கல்வி இயக்குனரகம் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தனியார் பள்ளிகளில் ஆன்லைன் இட ஒதுக்கீடு EWS/DG/CWSN பிரிவினருக்கு கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுகிறது.