செவிலியர்கள் ஆங்கிலம், இந்தியில் தான் பேச வேண்டும் – டெல்லி மருத்துவமனையில் சர்ச்சை!
டெல்லியில் பிரபல ஜி.பி.பண்ட் மருத்துவமனையில் செவிலியர்கள் தாய் மொழியில் பேசக் கூடாது என்று விதிக்கப்பட்ட நடைமுறை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த அறிவிப்பை நிர்வாகம் வாபஸ் வாங்கியுள்ளது.
ஜி.பி.பண்ட் மருத்துவமனை:
டெல்லியில் பிரபலமான ஜி.பி.பண்ட் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் செவிலியராக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கேரளாவை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் சில நோயாளிகளிடமோ அல்லது தங்களுக்குள்ளோ பேசிக்கொள்ளும்போது மலையாளத்தில் தான் பேசிக்கொள்வர். இதற்கு அந்த மருத்துவமனை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரேஷன் அட்டைகளில் புதிய குடும்ப உறுப்பினர் சேர்ப்பு – ஆன்லைனில் செய்வது எப்படி?
அதாவது மருத்துவமனையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு வந்தது. அதாவது மலையாளம் பேசினால் என்ன தவறு என சில செவிலியர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இதற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதற்கு கண்டனத்தை தெரிவிக்க தற்போது நிர்வாகம் அந்த உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.