2030 க்குள் புதிதாக 15,000 ஸ்டார்ட்அப் தொழில்கள் – அரசின் திட்டம்!
புதிதாக தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிக்க உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
ஸ்டார்ட்அப் தொழில்கள்:
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொழில்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் புதிது புதிதாக தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அவை மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டில்லி அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குறைந்தபட்சம் 15,000 ஸ்டார்ட் அப் தொழில்கள் உருவாவதை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிப்பதற்கான இலக்கை கொண்டுள்ளதாக தனது தொழில் துறை கொள்கையின் வரைவை இறுதி செய்துள்ளது. இத்துடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிணையம் இல்லாத கடன்களையும் பொருளாதார நிபுணர்களின் இலவச வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் இனி ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது? ஊழியர்கள் எதிர்ப்பு!!
இதற்காக டில்லி பஜார் என்ற போர்ட்டலை தொடங்க உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை விற்பனை பொருள்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக டில்லி பஜார் போரட்டலில் ஆரம்பகட்டத்தில் பத்தாயிரம் விற்பனையாளர்கள் இருப்பார்கள். மேலும் தொடங்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் ஒரு லட்சம் விற்பனையாளர்கள் டெல்லி பஜார் போர்ட்டலில் இருப்பதை டெல்லி அரசு இலக்காக கொண்டுள்ளது. டெல்லி அரசின் இந்த முயற்சி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.