50% அரசு ஊழியர்களுக்கு WFH.. காற்று மாசுபாட்டின் எதிரொலி – டெல்லி அரசு உத்தரவு!
டெல்லி காற்றின் தரநிலை மிகவும் மோசமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த டெல்லி சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மக்களின் நலன் கருதி அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஊழியர்களுக்கு EFH:
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நகர மக்கள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கவும் அதனை விற்பனை செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
இதனை மீறியும் டெல்லி நகர மக்கள் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடித்துள்ளனர். இதனால் தற்போது டெல்லி மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் காற்றின் தரக் குறியீடு 400 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நவ.5ம் தேதி முதல் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி ரேஷன் கடைகளில் “சோட்டு” 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை – கேரளா அரசு ஒப்புதல்!
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து தற்போது டெல்லி அரசு தனது ஊழியர்களில் 50% பேர் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. காற்றின் தரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதே போல தனியார் நிறுவனங்களிலும் 50 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.