தமிழகத்தில் தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு – தெற்கு ரயில்வே தகவல்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஓட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் முன்பதிவு கடந்த ஆண்டுகளை விட இந்த வருடம் மிகவும் குறைந்துள்ளது என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில்களில் முன்பதிவு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முதல்வர் அவர்கள் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை அறிவித்தார். இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. விதிகளை மீறி வெளியில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தொற்று பரவும் அச்சத்தாலும் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
கர்நாடகா மாநிலத்தில் இரவு ஊரடங்கு நீக்கம்? ஜூலை 19 முதல் பப்கள் திறக்க வாய்ப்பு!
பொது போக்குவரத்து சேவை முழுவதும் தடை செய்யப்பட்டது. ஆனாலும் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணத்தால் மக்கள் பெரும்பாலும் பயணங்களை தவித்தனர். பயணிகள் வருகை குறைந்ததால் முக்கிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பருவமழை காரணத்தாலும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ரயில்கள் இயக்கப்படாததால் ரயில்வே துறை பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட நடப்பு நிதியாண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து தற்போது தீபாவளி சிறப்பு ரயில்களின் முன்பதிவும் மந்தமடைந்துள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த நேரத்தில் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். மக்கள் வெகு நாட்களுக்கு முன்னரே முன்பதிவை தொடங்குவர். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவும் அச்சம் காரணமாக மக்கள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். அதனால் தீபாவளி சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கி 10 நாட்கள் ஆகியும் முன்பதிவு விகிதம் குறைவாக உள்ளது. ஏற்கனவே சிலர் கொரோனா காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதாலும் முன்பதிவு குறைந்து விட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.