கர்நாடகா மாநிலத்தில் இரவு ஊரடங்கு நீக்கம்? ஜூலை 19 முதல் பப்கள் திறக்க வாய்ப்பு!
கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ச்சியான சரிவைக் கண்டு வருவதால், கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூலை 19 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கவும் மற்றும் திறந்தவெளி பப்களை திறக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஊரடங்கு தளர்வு
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு தளர்வுகளின் நான்காவது கட்டமாக மால்களை மீண்டும் திறக்கவும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் இயக்க நேரங்களை நீட்டிக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது. முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் நேற்று (ஜூலை 12) ஒரு நாளில் 1,386 புதிய பாதிப்புகள் மற்றும் 61 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் ரூ.500க்கு கீழ் உள்ள திட்டங்கள்!
இதை தொடர்ந்து ‘மாநிலம் முழுவதும் ஜூலை 19 ஆம் தேதிக்கு மேல் கொடுக்கப்படும் சில தளர்வுகளின் அடிப்படையில், வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்குவது மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு நேரத்தை குறைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் இறுதி முடிவை எடுப்பார்’ என்று உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
கடந்த வாரத்தில் முதல்வர் எடியூரப்பா, மாநிலம் முழுவதும் மீண்டும் வணிகங்களை துவங்க அனுமதி கோரிய மால் உரிமையாளர்களை சந்தித்த பின்னாக, கொரோனா நெறிமுறைகளை கையாண்டு செயல்படுத்தப்படும் வகையில் மால்கள் மீண்டுமாக திறக்கப்படும் என்று முதல்வரின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ், சினிமா அரங்குகள் மற்றும் பப்களை திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளிக்கலாம் என கூறப்படுகிறது.