நவம்பர் 2, 3 & 4 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை – அரசு அறிவிப்பு!
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2, 3 ,4 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. அதன் விளைவாக தற்போது இந்தியா முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இன்று முதல் ATM இல் பணம் எடுக்க புதிய விதிமுறை – SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
புதுச்சேரியில் தமிழக பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருவதால் பள்ளிகள் திறப்பில் தமிழக அரசையே புதுச்சேரி அரசு பின்பற்றி வருகிறது. அதன்படி தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் கடந்த செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முதல் பருவ பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு!
கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 4 ம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் அதனை முன்னிட்டு நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.