ஒரு வருகைக்கு ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – தேர்வு கிடையாது..!
தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Counselor பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Child Protection Office Tenkasi (DCPO) |
பணியின் பெயர் | Counselor |
பணியிடங்கள் | As per Recruitment |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DCPO காலிப்பணியிடங்கள்:
தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Counselor பணிக்கான காலிப்பணியிடங்கள் தேவைக்கு ஏற்ப நிரப்ப உள்ளதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
DCPO கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Psychology பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். மேலும் கூடுதல் கல்வி விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.
Exams Daily Mobile App Download
DCPO முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேவையான அளவிற்கு பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
DCPO வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.
DCPO ஊதிய விவரம்:
Counselor பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒரு வருகைக்கு ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
DCPO தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
Join Our TNPSC Coaching Center
DCPO விண்ணப்பிக்கும் முறை:
தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்ப படிவத்தை தயார் செய்து, தேவையான ஆவணங்களையும் சேர்த்து 05.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்க வேண்டும்.
DCPO விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்,
அரசினர் குழந்தைகள் இல்லம்,
கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில்,
ரெட்டியார்பட்டி, நெட்டூர் வழி,
ஆலங்குளம் தாலுகா,
தென்காசி – 627854.