விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் 50வது நாளில் அறிமுகமான வைல்ட் கார்ட் என்ட்ரி – யார் இவர்? முழு விவரம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் தற்போது புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரியில் ஒருவர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடன இயக்குனர் அமீர் ஆவார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஏழாவது வாரம் முடிவடைந்துள்ளது. எட்டாவது வார தலைவராக அபிநய் தேர்வு செய்துள்ளார். மேலும் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அபிஷேக் ராஜா வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தார். அவர் வந்து பல சர்ச்சைகளை கிளம்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பொறுமையாக இருக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
இந்நிலையில் தற்போது புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஒருவர் வர இருக்கிறார். அவர் யார் என ப்ரோமோ எதுவும் வெளியாகவில்லை. அவர் யார் என்றால் நடன இயக்குனர் அமீர். இவர் ஊட்டியில் நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டுள்ளார். இதற்காக தான் நேற்றைய எபிசோடில் டான்ஸ் செட்அப் போடப்பட்டுள்ளது. இவருடைய என்ட்ரி பிக்பாஸில் எந்த மாதிரி மாற்றங்கள் ஏற்படுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
சித்து, ஸ்ரேயாவுக்கு இடையில் இப்படி தான் காதல் மலர்ந்ததா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
மேலும் இவர் சாண்டி மாஸ்டருக்கு நெருக்கமானவர் எனவும், பிரியங்கா ராஜுவிற்கு தெரிந்தவர் என்பதால் நிகழ்ச்சி கூடுதல் விறுவிறுப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 50 நாளில் வைல்ட் கார்ட் என்ட்ரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பிக்பாஸ் வீட்டில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இருக்கும் என பார்வையாளர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.